Sunday, April 19, 2009

மகேசும் பேய் கதையும்

ஹலோ!!!.. ஹலோ!!!.. தலைப்புல வர்ற பெயர படிச்ச உடனே தெறிச்சு ஓடாதீங்க ப்ளீஸ்!!........
மகேஷ் ஐ பற்றி தெரியாதவர்களுக்கு,....
உங்களுக்கு உயிர் மேல பயம் இல்லையா...???

அவனை பற்றி தெரிந்தவர்களுக்கு.....
ஆளை விட்ராசாமிணு நீங்க எஸ்கேப் ஆவறது புரியுது!!!!...

இத்தனை "தனித்திறமைகளை" கொண்ட நண்பன் மகேசும் மற்ற நண்பர்களும், ஒரு சனிக்கிழமை இரவு பதினோரு மணியளவில் "பீச்"க்கு நடந்து போய் கொண்டிருக்கையில் தான்...
மகேசின் வழக்கமான மொக்கை ... கொடுரமான மொக்கையானது!!!!!.....

அண்ணா!!.. இந்த டைம்ல பேய பத்தி பேசாதீங்க, ப்ளீஸ் !!!..
என்று ஒருவன் பாவமாக கேட்டது ,
பழம் நழுவி பாலில் விழுந்து பின் வாயில் விழுந்தது போல் ஆகிவிட்டது நண்பன் மகேசுக்கு!!!!...

அதன் பின் என்ன கொடுமை நடத்திருக்கும் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.
ஒரு 45 நிமிடம்!!!!...
"எங்க விட்டல,....... ......., ... .நைட் 12 மணி...
..
................. (இதுல .. voice modulation வேற!!!... )

...திடீர்னு பயங்கரசத்தம்... ......................,
....
நான் பக்கத்துலயே போயிட்டேன்....."
சொல்லிகொண்டுருக்கையில் ஒரு இருபது நிமிடங்களை கடந்திருப்பான், நண்பன் மகேஷ்....!

அப்போது அந்த அந்த அப்பாவி பையனின் கண்களில் மரண பயம் தெரிந்து....
அதை கவனித்தும் மகேஷ்'ன் கண்கள் என்னை பார்த்து
"எனக்கு ஒரு அடிமை கேடச்சுடாண்ட..."
என்று ஆனந்தத்தில் துள்ளி குதித்தது....

மற்ற நண்பர்கள் அமைதியாக பின் தொடர...
ஒரு 40 நிமிடம்.. மகேஷ் ரசிச்சி ரசிச்சி என்ஜாய் பண்ணினான்...
ஒருவழியாக கதையை முடித்துவிட்டு...
லேயாப் லிஸ்டில்" பெயர் வராத சாப்ட்வேர் எஞ்சினீர் ரேஞ்சுக்கு
சந்தோசம் அவனுக்குள்..
அந்த அப்பாவியுடன் எங்களையும் சேர்த்து சிதைத்தில் கிடைத்த மகிழ்சியில் உள்லுர சிரித்துக்கொண்டே,
அந்த அப்பாவியின் reply யை ஆவலுடன் எதிர்பார்த்தான் ..
நண்பன் மகேஷ்....

நொந்து போன நாங்களும் அடுத்து என்ன நடக்க போகுதோ!!!.. என்ற பீதியில் அவனை பார்த்தோம் !!!..

கதை கேட்டுக்கொண்டு வந்தவனோ!!!....
"அண்ணா!!!.. போங்கணா!!!.. எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது !!.. என்று டைமிங்கில் அடித்து நக்கலாய் சிரிக்க!!!....
?????
!!!!!!!
ஊஊஉ,....ஹா.... ஹா......

அடுத்த 20 நிமிடங்கள் வரை கடல் அலையை தோற்க்கடித்து,
எங்களின் சிரிப்பலை!!!....

மகேசின் நிலைமை...???
மக்களே!!.. என் நண்பன் மகேசை பத்தி சாதாரணமா நினச்சுடாதீங்க!!!!...

ஒட்டியிருந்த மணலுடன் சேர்த்து பட்ட அசிங்கங்களையும் அசால்டாக தட்டி விட்டு எழுந்த நண்பன்...,
படு கூலாக....
"மறுபடியும் அந்த பேய் எங்க வீட்டுக்கு பக்கத்துல"!!!!.... என்று ஆரம்பிக்க...
அடுத்த வினாடி...!!
அனைவரும் மகேசின் காலடியில்......!!!.
விண்ணை பிளந்து
கொடிய சத்தத்துடன் வந்து
என் மனதை தாக்குவது இடி அல்ல!!...
-அது உன் மௌனம்!!!!....

இது நம்ம பையன் பிரபு பீல் பண்ணுனது.....

Sunday, February 15, 2009

படித்ததில் பிடித்தது

நீ செய்த தவறு

என்னை நேசிக்காமல் இருப்பதல்ல...

நான் நேசிக்கும்படி இருப்பது!!..

V.Ramalingam.

படித்ததில் பிடித்தது

உன்னை பிரிகிறேன் என்னும்
நினைப்பே வலிக்கிறது.
ஆனால் உன்னோடிருப்பது அதைவிடவும்.....
- சுகுணா திவாகர்

Tuesday, January 27, 2009

காதல்

அணுஅணுவாய்
சாவதற்கு
வாழ்வதற்கு
முடிவெடுத்துவிட்ட பிறகு
காதல்
சரியான வழிதான்.
-அறிவுமதி

கால்சட்டை காலம்

எங்கு தூங்குகிறதோ
என் கால்சட்டை காலத்தின்
குத்துப்படாத பம்பரம்.

அறிவுமதி.

Monday, January 12, 2009

படித்ததில் பிடித்தது


"கரும்பும் சக்கரைப்பொங்கலும் எதற்கு
கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிரு
போதும்...."